Also Watch
Read this

இந்திய அரசினால், இலங்கை காவல்துறைக்கு 134 ‘கெப்’ ரக வாகனங்கள் நன்கொடையாக, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இலங்கை அதிபரிடம்...
இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ், இலங்கை காவல்துறையின்
பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 ‘கெப்’ ரக வாகனங்கள், அதிகாரப்பூர்வமாக இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கப்பட்டு உள்ளன. அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து, இந்த வாகனங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வட மாகாணத்தில்...
இந்த திட்டத்திற்காக, இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்த புதிய வாகனங்கள் அனைத்தும், முதற்கட்டமாக இலங்கை வட மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களின் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு வழிபாடு
இதற்கிடையில், தங்களுக்குப் புதிய வாகனங்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, வட மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், அந்த வாகனங்களை உள்ளூர் கோயில்களுக்கு கொண்டு சென்றனர். அங்கு வாகனங்களுக்குப் பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு, தங்களின் பயன்பாட்டை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved