Also Watch
Read this
By: Fyrose Banu

தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்தியாக, இயக்குனர் மணி ரத்னமும் நடிகர் விஜய் சேதுபதியும் மீண்டும் ஒருமுறை புதிய திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி இதை நேரடியாக உறுதி செய்தார்.
முன்னணி கதாபாத்திரமாக சாய் பல்லவி
இந்த புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரமாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முக்கியமாக, விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணி திரையில் முதன்முறையாக உருவாகிறது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த படம் போல் இருக்காது...
மேலும், இந்த திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம் படத்தின் பாணியில் இருக்காது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பழைய வெற்றிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகளில் அவர் ஆர்வம் இல்லையெனவும், ரீமேக் அல்லது சீக்குவெல் போன்ற வழிகளைத் தவிர்த்து புதிய களங்களில் தன்னை சோதிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மிகப்பெரிய சினிமா அப்டேட்
படத்தின் கதை, பின்னணி, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கூட்டணி மீண்டும் உருவாகிறது என்பது மட்டுமே தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சினிமா அப்டேட்டாக அமைந்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பிறகு வரும் இந்த இணைவு, தமிழ் திரையுலகில் இன்னொரு தரமான படைப்பை உருவாக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.