Also Watch
Read this
தவெக தலைவர் விஜய்யை பார்க்க வந்து, விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழந்தது குறித்து, நடிகை ஜூலி விமர்சித்து உள்ளார்.

வீடியோ வெளியிட்ட ஜூலி
இதுதொடர்பாக, சமூக வலை தள பக்கத்தில், ஜூலி வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது;
நான் இதற்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அந்த வீடியோவில் உங்களால் போன உயிர், 50 பேரை 500 பேராக ஆக்காதீங்க அண்ணா என்று சொன்னேன். அதற்காக என்னை, வெர்ச்சுவல் வாரியர்ஸ் வல்கராக திட்டினீங்க. ஆனா, இப்போ என்ன நடந்துச்சு? விஜய்-ஐ பார்க்குறதுக்காக ஒரு புள்ள, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வந்து, உசுரே போயிடுச்சு. அதுக்கு உங்க அண்ணன் என்ன பண்ணுனாரு? ஒரு இரங்கல் கூட சொல்லலையே.

வேதனை புரியும்
விஜய்-ஐ பார்க்குறதுக்காக தானே அவரோட வண்டி பின்னாடி வந்தாங்க. ஆனா, அதுக்காக அவர் ஒரு வார்த்தை கூட பேசல. இப்போ உயிர் போன குடும்பம் தான் கஷ்டப்படுது. விஜய்க்கு என்ன? அவர் சந்தோஷமா அடுத்த வீட்டு விஷேசத்துல கலந்து கொண்டு இருக்கார். இந்த மாதிரி விஷயம் அவர் வீட்டில நடந்திருந்தா தான் அந்த வேதனை புரியும்.

பாதுகாப்பு வேண்டும்
நாங்க எல்லா இடத்திலும் கேள்வி கேட்கத்தான் போறோம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு நீங்க சொல்றீங்களே. ஆனா பெண்களுக்கு உங்களை மாதிரி வெர்ச்சுவல் வாரியரிடமிருந்து தான் பாதுகாப்பு வேணும். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் கமெண்ட் பகுதியில என்ன மாதிரி மோசமான கமெண்ட்ஸ் வரும், நீங்களே பாருங்க.
இவ்வாறு பேசி, ஜூலி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved