Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 01:09 PM
By: Manigandan Raja

குறிவைத்து தாக்குதல் :
உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து 400 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved