தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கிய அறிவிப்புகள் ▪ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்▪மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு – இதுவரை பலன் பெறாதவருக்கும் கிடைக்க நடவடிக்கை ▪100 கோடியில் சென்னை அறிவியல் மையம் ▪2000 சுயசார்பு தொழிலாளர்களுக்கு E-bike வாங்க ரூ.20,000 மானியம் ▪காஞ்சிபுரம் அரசு அண்ணா மருத்துவமனை ரூ.120 கோடியில் தரம் உயர்வு ▪மதுரை கடலூரில் 250 கோடியில் காலணி தொழில் பூங்கா 20,000 பேருக்கு வேலை ▪ஓசூரில் ரூ.400 கோடியில் புதிய டைடல் பூங்கா ▪காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெரும் பள்ளிக்கும் விரிவாக்கத்திற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு ▪திருச்சியில் 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழில் பூங்கா - 5000 பேருக்கு வேலைவாய்ப்பு ▪சென்னை பெருநகர் பகுதிகளில் ரூ.88 கோடியில் மழை நீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் ▪திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, நெல்லை நதிக்கரை மேம்பாட்டிற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு ▪புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ▪10,000 மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டு ரூ.37,000 கோடி வழங்க இலக்கு ▪வேளச்சேரியில் ரூ.310 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்▪ சென்னை கோவை மதுரையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்▪நாட்டில் சிறந்த பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகத்தை உருவாக்க நடவடிக்கை ▪ஐ.நா அங்கீகரித்த 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்▪கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 6,100 கி.மீ. சாலைகள் அமைக்கப்படும் ▪பள்ளிப்பாடத்தில் செஸ் விளையாட்டு சேர்க்கப்படும் ▪விண்வெளி தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு ▪அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்▪இருமொழி கொள்கையில் மாற்றமில்லை. மத்திய அரசு கொடுக்காத கல்வி நிதிக்கு பதிலாக தமிழ்நாடே ரூ.2,000 கோடி ஒதுக்கும்▪கோவளத்தில் 14 tmc கொள்ளளவு கொண்ட புதிய நீர் தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும்▪செமி கண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா கோவையில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்▪புதிய புனல் மின் நிலையங்கள் ரூ.11,721 கோடியில் வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளில் அமைக்கப்படும் ▪சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் நடவடிக்கை ▪ரூ.70 கோடியில் 700 இயற்கை எரிவாயு பேருந்துகள் ▪சென்னைக்கு 950ம், கோவைக்கு 75ம், மதுரைக்கு 100 பேருந்துகள் என 1,125 மின் பேருந்துகள் இயக்க நடவடிக்கை▪19,000 கைவினையர்களுக்கு மானியமாக ரூ.74 கோடி 10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் உதவி ▪உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்▪சமூக நல்லிணக்க ஊராட்சிகள் விருது – 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை ▪புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் ▪ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி!▪பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க, தர்காக்களை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!▪பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000▪சென்னை கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம் ▪சென்னை சீராக்க குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு ▪102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறு சீரமைப்புக்கு ரூ.675 கோடி ஒதுக்கீடு ▪மகளிர் விடியல் பயணம்த்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு ▪சென்னைக்கு அருகில் உலகத்தரத்தில் புதிய நகரம் ▪10 இடங்களில் ரூ.77 கோடி செலவில் தோழி விடுதிகள் ▪கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.2,000 கோடி ▪அன்பு சோலை முதியோர் பராமரிப்பு மையம் 10 இடங்களில் அமைக்கப்படும்▪அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.50 கோடியில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும் ▪கலைஞர் கனவு இல்லம் – ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ▪மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பயிற்சியளித்து ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம் ▪வியன் திறன் மிகு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு▪4000 மெகா வாட் திறன் கொண்ட மின் கலன் சேமிப்பு அமைப்புகள்▪கடல் சார் வள அறக்கட்டளைக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு▪ரூ.40 கோடி செலவில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபு சார் காட்சி அரங்கம் ▪தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்▪பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு!▪ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்!▪நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைப்பு - 5,256 குடியிருப்புகள் சீரமைப்புக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு ▪திருவான்மியூர் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயர்மட்ட சாலை 14.2 கி.மீ நீளத்திற்கு அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு▪ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு▪இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு ▪மீன் பிடி தடை கால ஊக்கத்தொகை ரூ.8,000 ஆக உயர்வு▪இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ரூ.500 உதவித்தொகை ▪நான்காண்டுகளில் 78,882 பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் ▪ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடி▪மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்த ஆய்வு▪நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் - ரூ.75 கோடி ஒதுக்கீடு ▪முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 3000 புதிய வீடுகள் ▪எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும்▪உதகையில் ரூ.70 கோடியில் புதிய பூங்கா அமைக்கப்படும்.