Also Watch
Read this
By: Manigandan Raja

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழலில், 2-வது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 14.4 ஓவர்களில்3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
வலுவான பயிற்சிக் குழுவை உருவாக்க டெல்லி கேபிடல்ஸ் திட்டம்
முன்னாள் நட்சத்திர வீரர்கள் அடங்கிய வலுவான பயிற்சி குழுவை உருவாக்க டெல்லி கேபிடல்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, வேகப்பந்து பயிற்சியாளராக சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இலங்கையின் சமிந்தா வாஸ் ஆகியோர் செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.

அதேபோல, சுழல்பந்து பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆகியோரை பயிற்சியாளர் குழுவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved