news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திமுக அழுத்தத்தால் பின்வாங்கிய திருமாவளவன் - இபிஎஸ்
tv

Also Watch

tv

Read this

திமுக அழுத்தத்தால் பின்வாங்கிய திருமாவளவன் - இபிஎஸ்

பிரச்சாரத்தில் பிரித்து எடுத்த இபிஎஸ்

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தன் மீது கோபம் பொத்துக் கொண்டு வருவதில் எந்த பயனும் இல்லை, ஆ.ராசா மீதுதான் கோபம் வர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் வாக்கு சேகரிப்பு
ஆரணி மற்றும் விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து திருமாவளவன் பின்வாங்கியதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்றும், கூட்டணியில் உள்ளவர்கள் திமுக சொல்வதைதான் கேட்க முடியும் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

தண்டனை பெற்றுத் தருவோம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்திருந்தவர்கள் குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு விசாரித்து, அவர்களை கண்டறிந்து தக்க தண்டனை பெற்றுத்தருவோம் என கூறி உள்ளார்.

திமுக கொடுத்த அழுத்தம்
இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், வருகிற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த திருமாவளவன், திடீரென அந்த முடிவில் இருந்து பின் வாங்கியிருப்பதற்கு காரணமே திமுக கொடுத்த அழுத்தம்தான் என குற்றம்சாட்டி உள்ளார்.

Related Link
திருமாவின் திடீர் டுவிஸ்ட் ''திடுக்'' காரணம்

திருமாவின் திடீர் டுவிஸ்ட் ''திடுக்'' காரணம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
7 hrs 41 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved