Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனமங்கலத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைக் கழிவுகளை கொட்டிய லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு வழிச் சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் தொடர்ச்சியாக மர்மநபர்கள் இரவு நேரங்களில் கழிவுநீர், மருத்துவ கழிவு, குப்பை கழிவு, இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்வதால்,
கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறும் கிராம மக்கள், சீர்காழி நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved