Also Watch
Read this
By: Manigandan Raja

மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு
ஸ்காட்லாந்தில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மீராபாய் மற்றும் லவ்லினா இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடி மற்றும் தீபத்தை ஏந்தி செல்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, வெண்கலப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. அறிவியல் கல்விக்கான ஹோமி பாபா மையத்தின் ஒருங்கிணைப்புடன் இந்தியா இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், 4 மாணவர்கள் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.