Also Watch
Read this
By: Web Team

ஆசியக் கோப்பையை கையோடு எடுத்துச்சென்ற விவகாரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல் குறித்து ஐ.சி.சி.யிடம் கடுமையாக எடுத்துக் கூறுவோம் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுப்பவரிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்ததால், இந்திய அணிக்குச் சேர வேண்டிய கோப்பையையும், பதக்கங்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி எடுத்துச் சென்றார்.
அவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.