Also Watch
Read this
By: Web Team

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்குடையேயான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
இதனிடையே 3வது மற்றும் கடைசி போட்டியில் முதலாவது பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 16புள்ளி 4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved