வைபவ் சூர்யவன்ஷி முடிவு : இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தவிர்க்க உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பீகார் மாநிலம் தாஜ்பூரில் 10 வகுப்பு படித்து வரும் சூர்யவன்ஷி, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றாலும், தொடர்ச்சியான போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்க இருப்பதால் பொதுத் தேர்வை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Related Link விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள் இளைஞர்களே!