தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி : அதிமுக சின்னம் விவகாரத்தில் முடிவெடுக்க எவ்வளவு காலம் என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நீண்ட காலமாக முடிவெடுக்காமல் இருப்பதை எதிர்த்து கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதோடு, கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. Related Link வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்பு