Also Watch
Read this
By: Web Team

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை 12 ஆம் தேதி தேர்வு முடிந்ததும் ஜூலை 14ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு ட்ரங்க் பெட்டியில் சீல் செய்யப்பட்டு டிஎன்பிஎஸ்சி தலைமையகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சாதாரண அட்டைப் பெட்டியில் தேர்வு தொடர்பான ஆவணங்கள் மட்டுமே வைத்து அனுப்பப்படும் என்றும் அட்டைப்பெட்டியில் ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடைபெற்றது என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved