விமான சேவைகள் ரத்து : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று 410 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரால் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதையடுத்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற பல இந்திய விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இடங்களுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்தன. Related Link புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது