Also Watch
Read this
By: Manigandan Raja

உடல்நிலையை காரணம் காட்டி அதிபர் பதவி விலகியதால் தேர்தல்
வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபராக இருந்த முகமது ஷஹாபுதீன் உடல்நிலையை காரணம் காட்டி ஜூலை மாதம் பதவி விலகினார்.
1991-ம் ஆண்டுக்கு பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிபர் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், 35 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.
சிரியாவின் விமானத் தளம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள அபு துஹூர் (Abu Duhur) விமானத் தளம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. துருக்கியப் படைகள் நிலைநிறுத்தப்படுவதைத் தடுத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மண் சரிவு - சரக்கு வாகனங்கள் சிக்கி தவிப்பு
பெருவின் அரெகிபா பகுதியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டதால், கடலோர நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் சிக்கித் தவித்தன. சாலையில் மண் மற்றும் பாறைகள் குவிந்துள்ள நிலையில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved