Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவ தலைமை உத்தரவிட்டதன் பேரிலேயே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மட்டுமே நடத்தப்பட்டதாகவும் அதில் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எந்த பங்கும் கிடையாது என்றும் தெரிகிறது.
மும்பை தாக்குதலை போன்று லஷ்கர் இ தொய்பா அமைப்பு, பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் பஹல்காம் தாக்குதலை நடத்தியதாகவும், அதற்கான வழிகாட்டலை லஷ்கர் கமாண்டர் சாஜித் ஜுட் என்பவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வழங்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளது, பாகிஸ்தான் சிறப்பு கமாண்டோவின் முன்னாள் உறுப்பினரான சுலைமான் என்பவன் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியதும் தெரிய வந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved