Also Watch
Read this
By: Web Team

'எக்ஸ்' சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2022 ஆம் ஆண்டு ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதை தொடர்ந்து அதன் சி.இ.ஓ வாக லிண்டா யக்காரினோ நியமிக்கப்பட்டார்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த லிண்டா யக்காரினோ, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது, நிறுவனத்தை மீண்டும் உயர்த்துவது மற்றும் அனைவருக்குமான செயலியாக எக்ஸை மாற்றுவதற்கான பொறுப்பை தனக்கு அளித்ததற்காக, எலான் மஸ்கிற்கு மிகவும் நன்றியுள்ளவராக உள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படியுங்கள் : போப் பதினான்காம் லியோவுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved