Also Watch
Read this
By: Web Team

அரசு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஐ.சி.யு. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரணில் அதிபராக இருந்தபோது 2023-ல் அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இதையொட்டி, ரணில், அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் அரசு நிதியில் லண்டன் பயணம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த முறைகேடு வழக்கில், ரணில் விக்கிரமசிங்கே வெள்ளியன்று கைது செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved