Also Watch
Read this
By: Manigandan Raja

கோதே மையங்களை மூடுவதாக ரஷ்யா அறிவிப்பு
ஜெர்மனி பெர்லினில் உள்ள ரஷ்ய இல்லத்தை மூடியதற்குப் பதிலடியாக, ரஷ்யாவிலுள்ள கோதே மையங்களை மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஹாலே விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஜெர்மனி ரஷ்ய மையங்களை மூடியது.
இதற்கு பதிலடியாக, ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் யெகாடெரின்பர்க் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் ஜெர்மனியின் கோதே-இன்ஸ்டிடியூட் கலாச்சார மையங்களை ரஷ்யா மூட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஓபன் ஏ.ஐ. நிறுவன சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் விளக்கம்
ஒரு பாதாம் பருப்பை உற்பத்தி செய்யத் தேவைப்படும் அளவு தண்ணீர் தான், 38 ஆயிரம் ChatGPT கேள்விகளைக் கையாள்வதற்கும் தேவைப்படுவதாக OpenAI நிறுவன சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தரவு மையங்கள் மற்றும் அவை பயன்படுத்தும் தண்ணீரின் அளவு குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள கவலைகளுக்கு சாம் ஆல்ட்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
டொரொண்டோ நகரில் பலத்த சூரைக்காற்றுடன் கனமழை
கனடாவின் டொரொண்டோ நகரில் பலத்த சூரைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. பலத்த காற்றால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததோடு, பல பகுதிகளில் மின் விநியோகம் தடை பட்டதால், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து முடங்கியது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved