Also Watch
Read this
By: Manigandan Raja

105 விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்
இந்தியாவில் விமான விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ரஷ்ய நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் 105 உள்நாட்டு பயணங்களுக்கான விமானங்களை விற்பனை செய்ய இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
விமானங்களை விற்பனை செய்வதோடு, ரஷியாவின் SJ-100 ரக 100 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்களை இந்தியாவில் உரிமம் பெற்று தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.
சீனாவில் சர்வதேச சரக்குக் கப்பலில் தீவிபத்து
சீனாவில் உள்ள கிங்டாவோ (Qingdao) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். லைபீரியக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென தீப்பற்றியது.

கப்பலில் இருந்த 42 பேரில் 12 பேர் வெளியேற்றப்பட்டனர். ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved