இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி : கடந்த காலங்களில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடையை இந்தியா மதித்து செயல்பட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு, அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது என்றார். குறிப்பாக, கடலில் கப்பல்களில் தேங்கிக் கிடக்கும் ரஷ்யா கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ய 30 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். Related Link இன்றைய உலக செய்திகள்