Also Watch
Read this
By: Manigandan Raja

வெள்ளை கவுனுடன் வெள்ள நீரில் நடந்து சென்ற மணப்பெண்
பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஹகோனாய் ((Hagonoy)) நகரில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்தில் ஒரு புதுமண தம்பதியின் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் லியான் லீசா கலங் ((Leian Lieza Galang)) வெள்ளை நிற கவுன் அணிந்து, கையில் பூங்கொத்துடன் வெள்ள நீரில் கவனமாக நடந்து சென்று, மணமகன் கில்பர்ட் சிகோவை கரம்பிடித்தார்.
திபெத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம்
திபெத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
அர்பா நகரின் ஆலிவ் தோட்டங்களை அழிக்கும் இஸ்ரேல்
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் அர்பா நகரில் உள்ள ஆலிவ் தோட்டங்களை, இஸ்ரேலிய இராணுவத்தினர் புல்டோசர் மூலம் அழித்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

70 ஆண்டுகள் வரை பாடுபட்டு வளர்த்த ஆலிவ் மரங்கள், வருடாந்திர அறுவடை தொடங்கும் நேரத்தில் பிடுங்கி எறியப்படுவதால், வருமானம் தடைபட்டு, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளதாக பாலஸ்தீன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved