Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பில் இருந்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிரிட்டன் தூதர் லிண்டி கேமரோன் ((Lindy Cameron)) இந்தியாவுக்கு பிரிட்டனின் ஆதரவை தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விமான விபத்துக்காக தமது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்து இந்த துயரமான விபத்து குறித்த இரங்கல்களை தெரிவித்ததாகவும், சோகத்தை இருவரும் பங்கிட்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved