Big Stories

சனிபகவான் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாரில் சனிபகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத
கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

காரைக்கால் அடுத்து உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற
ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர
சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ ஹோமம்
மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து பால்,தயிர், மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட
திரவியங்களினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து
யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை
சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்தனர் பின் கலசம் மற்றும் சங்குகளில்
உள்ள புனித நீரினை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து
சிவனுக்கும்,அம்பாளுக்கும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை
நடைபெற்றது.சங்காபிஷேக விழாவில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ
கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர்
உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சனிபகவான் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

00 Comments

Leave a comment