சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டியில் வளரொளிநாதர்
வயிரவசுவாமி கோயிலில் பைரவ மகாயாகம் துவங்கியது. திருப்பத்தூர் அருகே உள்ளது
நகர வைரவன்பட்டி ஸ்ரீவடிவுடைய அம்பாள் உடனுறை வளரொளிநாதர் கோயிலில் உலக நன்மை
வேண்டி சதுர் ஷஷ்டி பைரவ மஹாயாகம் இரண்டாவது ஆண்டாக பிரம்மாண்டாக தொடங்கியது.
இங்கு எழுந்தருளியுள்ள மார்த்தாண்ட வயிரவசுவாமிக்கு சன.4 ல் பைரவர் மகாயகம்
நடைபெறுகிறது. அதை முன்னிட்டு 3 நாட்களில் 4 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதற்கான முதல் நாள் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் நடைபெற்ற, யாகசாலையில்
எழுந்தருளிய சுவாமிக்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தீபாராதனை
காண்பித்து முதற்கால யாக பூஜையை துவக்கி வைத்தார். தொடர்ந்து 64 குண்டங்கள்
மற்றும் பிரதான குண்டத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. உலக மக்கள் மற்றும்
அனைத்து ஜீவராசிகளும் நன்மை பெற வேண்டி இந்த யாகம் நடைபெற்று வருகிறது.
Big Stories
00 Comments
Leave a comment