சினிமா

இயக்குநர் செல்வராகவன் விமானத்தில் தவறவிட்ட பர்ஸ் பத்திரமாக திருப்பி கொடுத்த ஏர் இந்தியா | Director Selvaraghavan Air india

இயக்குநர் செல்வராகவன் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, தன்னுடைய பர்ஸை தொலைத்து விட்டதாகவும், பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் அதனை பத்திரமாக திருப்பி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'இன்று மதுரையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், என்னுடைய பஸ்ஸை தவறவிட்டு விட்டேன்' எனவும், அது தொலைந்த 15 நிமிடங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூலம் தம்மை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு , பத்திரமாக என்னுடைய பர்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டதால், நன்றி ஏர் இந்தியா என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தங்களுக்கு உதவியதில் மிகவும் மகிழ்ச்சி என ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

 

மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில் பணப்பையை தொலைந்த 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் எர் இந்தியா விமானம் மூலம் சென்னை
புறப்பட்டார்.


இதன் பின்னர் இயக்குனர் செல்வராகவன் வைத்திருந்த அவருடைய பணப்பை தொலைந்தது. விமானத்தில் தொலைந்த தனது பணப்பையை இயக்குனர் செல்வராகவன் தேடி உள்ளார். இதனைத் தொடர்ந்து 15 நிமிடத்திற்குள் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது தங்களுடைய பணப்பை எங்களிடம் இருக்கிறது என்றும் இதை வந்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.


பணப்பையை சேகரித்த செல்வராகவன் ஏர் இந்தியா விமானத்திற்கு நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில்

 இன்று மதுரையிலிருந்து @airindia விமானத்தில் எனது பணப்பையை தவறவிட்டேன். பதினைந்து நிமிடங்களில் அவர்கள் எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு அஞ்சல் அனுப்பியுள்ளனர், நான் பணப்பையை சேகரித்தேன். நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். @airindia க்கு மிக்க நன்றி!"என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன்
பதிவிட்டுள்ளார்.

00 Comments

Leave a comment