இந்தியா

பிரதமர் மோடியின் பேச்சை AI மூலம் தமிழில் கேட்க ஏற்பாடு... மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

பிரதமர் மோடி பேசினால் அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் நேரடியாக தமிழில் கேட்க
ஏற்பாடு செய்யப்படும் அண்ணாமலை பேட்டி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


தமிழகத்தின் தென் பகுதியில் மழை கனமாக தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை விருதுநகர் ஆகிய
மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கெடுத்து நகரத்தில் பெரும் வெள்ள
பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகள் களத்தில் மக்களுக்கு தேவையான
உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து பகுதியிலும் மோடி கிச்சன் திறக்க வேண்டும் என
நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளேன். மழை கடந்து பிறகு நிவாரண உதவி செய்ய
பா.ஜ.க. அரசுடன் களத்தில் நிற்கும். இது வரலாறு காணாத மழை அதிகப்படியான மழை
தான். சென்னை முடிந்து தென் பகுதியில் மழை. மூப்படை உதவியை தலைமை செயலாளர்
கோரி உள்ளார். சூலூரில் இருந்து இந்திய விமானப்படை உணவு வழங்க கோரி உள்ளனர்.
மக்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் அதை செய்ய பா.ஜ.க. தயாராக இருக்கிறது.
கடலுக்கு செல்ல கூடிய மீனவர்கள் அரசு என்ன சொல்லி இருக்கிறதோ அதை கடைபிடித்து
பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வாரணாசியில் 2வது ஆண்டாக பிரதமர் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்து
உள்ளார். டிசம்பர் 30ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் இருந்து 7 குழுக்கள்
காசிக்கு செல்கிறது. முதல் குழுவாக மாணவர் குழு காசி சென்று உள்ளது. ஆசிரியர்
குழு காசி செல்கிறது. 1500க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாரணாசிக்கு
சொல்கின்றனர். கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் சிறப்பாக நடக்கிறது. மேடையில்
திருக்குறளை புதிதாக 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பிரதமர் மோடி
வெளியிட்டார். கடந்த ஆண்டு 13 மொழிகளில் வெளியிடப்பட்டது. திருக்குறளை 29
மொழிகளில் காசி சங்கமத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. சங்க கால இலக்கியத்தில்
இருந்து 46 நூல்களை பார்வையில்லாதவர்கள் படிக்க வெளியிட்டு உள்ளார்கள்.
பிரதமர் இந்தியில் பேசுவதை நேரிடியாக காசி தமிழ் சங்கமத்தில் அனைவரும் நவீன
தொழில் நுட்பத்தில் தமிழில் கேட்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில்
எத்தனையோ மொழிகள் இருந்தாலும் இந்தியில் தமிழில் மொழி பெயர்ப்பை அறிமுகம்
செய்து வைத்தார். இதை கேட்க ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. தமிழகத்தில்
பிரதமர் பேசுவதை மக்களுக்கு நேரிடியாக தமிழிலில் கேட்க கூடிய மாதிரியாக
இருந்தது.

அடுத்த 15 நாட்கள் காசிக்கு சென்று சங்கமத்தில் பங்கேற்க வேண்டும்.
தமிழகத்தின் பாரம்பரிய பொருட்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் பேச்சை AI மூலம் தமிழில் கேட்க ஏற்பாடு...    மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

00 Comments

Leave a comment