தமிழ்நாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சை பாபநாசம் அருகே நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதமாக விளங்கும் ரமலான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து பிறை தென்படும் அடுத்த நாள் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபநாசத்தின் பல இடங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

00 Comments

Leave a comment