தமிழ்நாடு

மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை

மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் தவ்ஹீத்ஜமாத் மற்றும் JAQH அமைப்பு சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நிகழ்ச்சிகளில், இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மதுரை எல்லிஸ்நகர், தமுக்கம், மீனாம்பாள்புரம், திருமங்கலம், மேலூர், வில்லாபுரம், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள திடல்களில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் JAQH அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் திறந்தவெளி பகுதிகளில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

00 Comments

Leave a comment