தமிழ்நாடு

மழை பெய்ய வேண்டி பூமா தேவிக்கு சிறப்பு பூஜை..!

மழை பெய்ய வேண்டி பூமா தேவிக்கு சிறப்பு பூஜை..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வீரடிப்பட்டியில் மழை பெய்ய வேண்டி பூமாதேவிக்கு காப்பரிசி படையலிட்டு விவசாயிகள் வழிபட்டனர். முன்னதாக விவசாயிகள் விநாயகர் கோயிலில் பூஜை செய்து தேர்வு செய்யப்பட்ட நிலத்திற்கு வரிசையாக டிராக்டர்களில் அணிவகுத்து சென்றனர். பின்னர் விவசாய நிலத்தில் தேங்காய் உடைத்து காப்பரிசி படையிலிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து டிராக்டர்களை கொண்டு விவசாயிகள் நிலத்தை உழுதனர். பின்னர் விவசாயிகளுக்கு காப்பரிசி வழங்கப்பட்டது.
 

00 Comments

Leave a comment