சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதிய கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 16 வயது சிறுவன் கௌதம், மணிகண்டன் ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த சுந்தர மணிகண்டனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment