ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தை வழிமறித்த யானையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் அவ்வப்போது சாலையை மறித்து நிற்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் உணவு தேடி ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த யானை தனியார் பேருந்தை வழி மறித்தவாறு நின்றதோடு, அவ்வழியாக சென்ற லாரியில் காய்கறி, கரும்பு ஏதேனும் உள்ளதா என பார்க்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment