நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் லில்லியம் மலர்களை சுற்றுலாப்
பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் என்பதால் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மலர்க கண்காட்சிக்காக வெளிநாட்டு ரகங்களான லில்லியம், பெட்டூனியா, சால்வியா உள்ளிட்ட மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது.
00 Comments
Leave a comment