Also Watch
Read this
By: Web Team
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயிலில் வந்த வட மாநிலத்தவர்கள் 300க்கும் மேற்பட்டோர், டிக்கெட் இன்றி பயணித்த நிலையில், அவர்களை பரிசோதனை செய்ய முயன்ற போது கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக வந்த தகவலையடுத்து நடுவழியில் ரயிலில் ஏறிய பரிசோதகர்கள் சோதனை செய்தனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களை மடக்கி விசாரணை நடத்த முயன்றுள்ளனர். அப்போது, அந்த யாத்திரிகர்கள் அனைவரும் கும்பலாக ஒன்று சேர்ந்து, “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத், ஜெய் ஹோ” என கோஷமிட்டபடி அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சம்பவத்தால் செய்வது அறியாமல் திகைத்துப் போன டிக்கெட் பரிசோதகர்கள், வேறு வழியின்றி அவர்கள் சென்றதை பார்த்துக்கொண்டே நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved