Also Watch
Read this
By: Manigandan Raja

தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது :
கோடை வெயிலின் தாக்கத்தால் திண்டுக்கல் முழுவதும் தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கிலோ ₹30 முதல் ₹40 வரை சில்லறை விற்பனையிலும், ஒட்டன்சத்திரன் போன்ற மொத்த சந்தைகளில் கிலோ ₹20 முதல் ₹25 வரையிலும் விற்பனையாகிறது.
தேனி, திண்டிவனம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரத்து அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் இருந்து தினசரி 250 டன் வரை தர்பூசணி மற்றும் 200 டன் கிரண் வகை தர்பூசணிகள் வருகின்றன. கடந்த வருடம் தர்பூசணி குறித்த வதந்திகளால் விலை சரிவு ஏற்பட்டாலும், இந்த வருடம் வெயிலின் தாக்கத்தால் விற்பனை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது என்கின்றனர் வியாபாரிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved