தமிழ்நாடு

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 19 நாட்கள் 610 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு ஆணை

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 19 நாட்கள் 610 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு ஆணை

 

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவைக்காகவும்
பாசனத்திற்காகவும் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. ஆழியார்
அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பல ஏக்கர் பாசன நிலங்கள் பயன்
பெறும்.இந்நிலையில் பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் ஆழியார் புதிய பாசனம்
ஆ மண்டல பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக பிப்ரவரி
12ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை உள்ள 40 நாட்களில் தகுந்த இடைவெளி
விட்டு 19 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில் மொத்தம் 610
மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட
அரசு ஆணையிட்டுள்ளது .இதனை அடுத்து ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக
தண்ணீர் திறந்து விடப்பட்டது என நீர்வளத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.இதனால் 22 ஆயிரத்து 332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.

00 Comments

Leave a comment