Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோர்முஸ் நீரிணை ஈரான் உத்தரவுக்கு மட்டுமே திறக்கும்
ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் உத்தரவுப்படி மட்டுமே திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீரிணையை கைப்பற்றி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி,ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது, ஈரானிடம் உள்ளது, ஈரானிடமே நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.மேலும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்று கற்பனைகளைக் கைவிடும் வரையில் ஈரான் நீரிணை முடக்கத்தைத் தொடரும் என துணை வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவு அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர் கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், நிலச்சரிவும் ஏற்பட்டதாகவும், கடலோர பகுதிகளில் சிறிய சுனாமி அலைகளும் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாணவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். துபாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved