Also Watch
Read this
கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்திருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.


கேரள கோர விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த PSNA பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்கு காரணம் என்ன?
கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் வழியில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

விதிகளை மீறி நெடுஞ்சாலையில் லாரி நிறுத்தி வைத்திருந்ததே, கேரள கோர விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

சாலை பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திரும்புவது குறித்து சரியான இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பளம் போல் நொறுங்கிய கார்
சரக்கு லாரியின் பின்புறம் பயங்கரமாக மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய கார், உருக்குலைந்து போனது.

உருக்குலைந்த காரின் பாகங்களை வெட்டி எடுத்து, தமிழக கல்லூரி மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட கோரம் நிகழ்ந்துள்ளது.



© Copyright Newstamil 24x7 2026. All rights reserved