Also Watch
Read this
By: Manigandan Raja

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் சிகிச்சை பெற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்கள்ல கவனம் செலுத்திட்டு வராங்க. நடிப்புடன் சேர்த்து திரைப்படத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ள சமந்தா, அவரே நடித்தும் தயாரித்தும் வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படம் சமீபத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துருந்துச்சு.
இந்த நிலையில், விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுது. இதன்மூலம், திரைப்படங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுத்தாலும், சின்னத்திரை மூலம் ரசிகர்களை தொடர்ந்து சமந்தா கவனம் ஈர்த்து வருவாருன்னு தகவல் இணையத்தில் பரவி வருது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு வருது.
2 நாட்களில் கோடி வசூலை தொட்ட 'அன்பே டயானா'

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்திற்கும் அன்பே டயானா திரைப்படம் கடந்த ஜூலை 17-ம் தேதி வெளியாகிருந்துச்சு. இந்த படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், செல் முருகன், பரிதாபங்கள் கோபி என பலர் நடிச்சிருந்தாங்க. காதல் கதையை மையமாக கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், படத்தின் 2 நாட்கள் வசூல் விவரம் வெளியாகிருக்கு.
அதன் படி, இந்த படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூபாய் 1.7 கோடி வசூல் செய்திருப்பதா தகவல் வெளியாகிருக்கு.