Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருதய அறுவை சிகிச்சைக்கு சென்ற மூதாட்டி, 100 நாள் வேலைக்கு வந்தது போல் கணக்கு காட்டி பணிதள பொறுப்பாளரும், அவருக்கு உடந்தையாக ஊராட்சி செயலாளரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
வெட்டியாந்தொழுவம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஜோதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சமயத்தில், அவர் 100 நாள் வேலைக்கு வந்தது போல் பணிதள பொறுப்பாளர் ரேணுகா பதிவேட்டில் வருகையை பதிவு செய்துள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மூதாட்டியிடம், வேலைக்கே வராமல் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டதாகவும், 500 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி 4600 ரூபாயை தருமாறு மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.