மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி மலை கோவிலுக்குச் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.