Also Watch
Read this
By: Manigandan Raja

குப்புறக்கவிழ்ந்த லாரி..!
கோத்தகிரியில் அதிக பாரம் ஏற்றி வந்த எருவு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பிய நிலையில் தலை குப்புறக்கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு பகுதிகளில் இருந்து நாள்தோறும் கனரக வாகனங்களில் மரம் மற்றும் எருவு லோடுகள் ஏற்றி செல்லப்படுகிறது இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு மலைப்பாதைகளில் இது போன்ற லாரிகள் செல்கின்றன.
இந்த நிலையில் கட்டப்பெட்டு குடுமனை பகுதியில் எருவு லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக லாரியிலிருந்து ஓட்டுநர் உயிர் தப்பினர் சாலையில் விழுந்த எருவு லாரியையும் க்ரீன் உதவியுடன் மீட்க முயற்சிகள் நடைபெற்றது.
மேலும் லாரி விபத்து தொடர்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved