Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் இரு வேறு இடங்களில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலை தடுக்க சென்ற காவலர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.
பில்ராம்பட்டு கிராமத்தில் இரு தரப்பினரிடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் இரு தரப்பினரையும் விலகி செல்ல வலியுறுத்தினர்.
அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசியதில் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் தேவரத்தினம், தலைமை காவலர் ஹரி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து மூவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் நடந்த மோதலில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் 950 மாணவர்கள் பங்கேற்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved