Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமையான பேசும் பெண் தெய்வம் பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
நடைபெற்றது.
கடந்த 20ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த நாள் நடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாம் ஸ்தானிக பட்டர் ரமேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க குடமுழுக்கு விழா நடைபெற்றது.
21 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved