Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நியாயவிலைக் கடையில் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
அய்யனார்குளம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் இருந்து இரவு நேரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவதைக் கண்ட இளைஞர்கள், கடத்தல் வேனை துரத்திப் பிடித்தனர்.
மேலும், இதை வீடியோவும் பதிவு செய்து போலீஸாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் வருவதற்குள் இளைஞர்களை ஏமாற்றி விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றது.
இதுகுறித்து நியாயவிலைக் கடை விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved