Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் எட்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மன்னார்குடி கூத்தாநல்லூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர் .தீ மல மலவென பரவியதால் வீட்டிலிருந்த மரக்கட்டில், பீரோ மற்றும் மின் சாதன பொருட்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின.

வீடு எரிந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில 8 கூரை வீடுகள் எரிந்து சேதமாகிய சம்பவம்
அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது . .
சம்ப இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் . இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டுள்ளதா இல்லை வெப்பத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.