முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வேலூர் பயணத்தின் போது காலையில் மனு அளித்த பெண்ணுக்கு சில மணி நேரங்களிலேயே பணி ஆணை வழங்கியதால் அப்பெண் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வேலூர் வந்த முதல்வரிடம் சேர்காடு பகுதியை சேர்ந்த பொற்செல்வி என்ற பெண் ஆதரவற்ற சூழலில் இருப்பதாகக் கூறி அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மனு ஒன்றை அளித்தார். மனுவை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரை வரவழைத்து வழங்கினார்.இதையும் படியுங்கள் : ஓட்டபிடாரத்தில் அதிமுக நிர்வாகி கொலை.. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்