Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே செல்போன் கடைக்கு சென்றவரை தெரு நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த மருதமலை , பழுதான தனது செல்போனை சரி செய்ய அதே பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு செல்வதற்காக கடையின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது அருகில் இருந்த
தெரு நாய் ஒன்று அவரை கடித்துக் குதறி தள்ளியது. இதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.