Also Watch
Read this
By: Web Team
தமிழக காவல்துறையின், சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு இதயம் தொடர்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுப்பில் உள்ளார். இதனால், அவர் வகித்து வந்த பொறுப்பு டிஜிபி பொறுப்பை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved